சமுத்திரக்கனியின் 'ரைட்டர்' படப்பிடிப்பு நிறைவு
Posted on 04/02/2021

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடிக்கும் 'ரைட்டர்' என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு', 'குதிரைவால்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ரைட்டர்'. இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்திருக்கிறார். இயக்குனர் பிராங்களின் ஜேக்கப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, பிரதீப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறையில் எழுத்தராக பணியாற்றும் சமுத்திரக்கனியின் வாழ்வியலை மையப்படுத்தியும், பெண் காவலராங பணியாற்றும் நடிகை இனியாவை முதன்மைப்படுத்தியும் திரைக்கதை உருவாகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். பா ரஞ்சித் தயாரித்திருக்கும் காரணத்தினாலேயே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.